For Daily Alerts
Just In
பாலாற்றில் வெள்ள அபாயம்
வேலூர்:
பாலாற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் குறைந்த தாழ்வு நிலை மையம் கொண்டிப்பதால் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் வேலூர் அருகேயுள்ள பேத்த மங்கலம் ஏரி தற்போது நிரம்பி விட்டதால் வெள்ளம் கரைபுரண்டுஓடுகிறது. தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.
அதிகமான நீரை வேலூர் மாவட்டத்தில் உள்ள பல ஏரி, குளங்களுக்கு திருப்பி விட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி 23 அடி நிரம்பியுள்ளது. இதன் கொள்ளளவு28 அடி ஆகும். இதனால் இந்த ஏரியின் கரையும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அங்குள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, November 5, 2005, 5:30 [IST]