மீண்டும் வெள்ளக்காடனது சென்னை
சென்னை:
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரம் வெள்ளக்காடானது.
சென்னையில் இடைவிடாது அடை மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் மழையில் கடுமையாகபாதிக்கப்பட்ட வடசென்னை மீண்டும் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. புளியந்தோப்பு, வியாசர்பாடி,சூளை பகுதியில் கடந்த புயலின் போது இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்து வீடுகளுக்குள் புகுந்தது.
தற்போது அந்தப் பகுதி மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பரிதவித்தனர். இரவு முழுவதும் பெய்த மழைகாலையிலும் நீடித்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
திருவொற்றியூர் கார்கில் நகரில் உள்ள வீடுகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வட சென்னையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.