தமிழக ஆளுநருக்கு 5 ஆண்டு பதவி நீடிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநனராக 2வது முறையாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம்நாளையுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது.இந்த நிலையில் அவருக்கு பதவி நீடிப்பு கிடைத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் வருகிறது. இந்நிலையில் அனுபவசாலியான பர்னாலாவைமாற்ற மத்திய அரசு விரும்பவில்லை.
எனவே பர்னாலாவுக்கு பதவி நீடிப்பு தர முடிவு செய்யப்பட்டு அதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்குபிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ளார்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பார்என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications