For Quick Alerts
For Daily Alerts
Just In
பாஜகவுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
நட்வர் சிங் விவகாரத்தில் பாஜகவுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நட்வர் சிங் பதவி விலக வேண்டும் என்று பாஜக கோரி வருகிறது.குற்றம் நிரூபிக்கப்படும் முன்னரே பதவி விலக வேண்டும் என்று கோருவதற்காக அக்கட்சிக்கு திமுக தலைவர்கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காங்கிரஸ் கட்சி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் மீது கூறப்படும் புகார் நிரூபிக்கப்படுவதற்குமுன்னரே தண்டிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
குற்றம் சுமத்துவதாலேயே ஒருவரை பழிவாங்க முடியுமென்றால் அது தவறான வழிகாட்டுதலாக அமைந்து விடும்என்று கூறியுள்ளார்.
Comments
Story first published: Sunday, November 6, 2005, 5:30 [IST]