For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 பெண்கள் பலி நீதிவிசாரணை நடத்த திமுக கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை வியாசார்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 6 பெண்கள் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும்என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறியிருப்பதாவது

நிவாரண உதவி பொருட்கள் பெற சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து ஸ்டான்லிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தானும் மற்றும் திமுக பிரமுகர்களும் நேரில் சென்று சந்தித்துஆறுதல் கூறினோம்.

அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் 6 பேர்களில் 4 பேருக்கு மட்டும் அரசு சார்பில் ரூ.15,000வழங்கப்பட்டதாகவும் திமுகவை சேர்ந்த 2 பெண்களுக்கு இந்த உதவி கிடைக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்த பாராபட்சை போக்கை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் இறந்த 6 பெண்கள் குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது ஆழ்ந்தஇரங்-கலை தெரி-வித்-துக்கொண்-டுள்ளார். மேலும் நிவா-ரண உத-வி-கள் பா-திக்-கப்-பட்ட மக்-க-ளுக்கு கிடைத்-திடமுறை-யான ஏற்-பா-டு-களை செய்ய வேண்-டும் என்-றும் கேட்-டுக் கொண்-டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X