ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு புதிய நகரியம்: ஜெயலலிதா
சென்னை:
ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு சென்னையில் புதிய நகரியம் அமைத்து தருவதாக முதலமைச்சர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
ஜப்பான் புகுவோகா நகர மேயர் ஹிரோதரோ யமகாகி தலைமையில் பொருளாதார குழுவினர் சென்னை வந்தனர்.இந்த குழுவினர் முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்கள்.
இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
அவர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
ஜப்பான் தமிழ்நாட்டுடன் நெருக்க ஒத்துழைப்பு தருவதற்கு முன் வந்துள்ளது பாரட்டுதலுக்குரியது.
ஜப்பான் முதலீட்டாளர்களுக்காக சென்னையில் வீட்டு வசதி, கல்வி, கலாச்சாரம், பொழுது போக்கு, சமூகதேவைகள் ஆகியவற்றுக்கான புதிய நகரியம் ஒன்றை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்.
சென்னையில் ஒரு குட்டி ஜப்பான் என்று கூறும் அளவுக்கு இந்த நகரியம் அமையும்.
தமிழ் நாட்டுக்காக ஜப்பான் வங்கி ரூ.643 கோடி வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறினார்.
இதை தொடர்ந்து ஜப்பான் மேயர், தமிழக அரசு அளித்து வரும் ஒத்துழைப்புக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications