புதிய அறக்கட்டளை: கருணாநிதி ரூ.5 கோடி நிதி
சென்னை:
நலிந்தோர் நல்வாழ்வுக்கான அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்கு கருணாநிதி ரூ.5கோடி நிதி வழங்கினார்.
இது குறித்து கருணாநிதி கூறியதாவது:திமுக அறக்கட்டளை மூலமாக பொதுவான துயர்த்துடைப்பு நிதிகளும், நலிந்தோருக்கான உதவி நிதிகளும்வழங்கப்பட்டு வருகின்றன.
நான் எழுதி தமிழ்க்கனி பதிப்பகம் வெளியிட்ட தொல்காப்பிய பூங்கா, தாய், வான் புகழ் கொண்ட வள்ளுவம்போன்ற நூல்களின் மூலமாக கிடைத்த ரூபாய் 43,50,000 இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
இதனால் 523 பேர் பயன் பெற்றுள்ளனர்.
இப்போது மேலும் ஒரு வாய்ப்பாக சன் டிவி மற்றும் குங்குமம் பத்திரிகைகளில் என் மனைவி பெற்றிருந்த 20சதவீத உரிமைகளை முழுவதுமாக விற்று சுமூகமான முறையில் அவற்றில் இருந்து கிடைத்த தொகையில் வருமானவரி போக மீதித் தொகையான 10 கோடி ரூபாயில் கலைஞர் கருணாநிதி நலிந்தோர் நல்வாழ்வுக்கானஅறக்கட்டளையை தொடங்க முடிவு செய்துள்ளேன்.
இந்த தொகையின் மூலம் கிடைக்கும் மாத வங்கி வட்டி ரூ. 2,50,000 தமிழ் மொழி வளர்ச்சிக்கும், ஏழைஎளியோருக்கு சிகிச்சை நிதி, திருமண உதவி நிதி, கல்வி வளர்ச்சி நிதி வழங்கவும் பயன் படுத்திக் கொள்ளுமாறுகூறியுள்ளேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications