நாகையில் கடல் கொந்தளிப்பு
நாகை:
நாகை கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது.இதனால் நாகை கடலில் சீற்றத்துடன் அலைகள் பாயத் தொடங்கியுள்ளன. கரைஎடுப்பு பருவத்தினால் கடலில்சீற்றம் அதிகமாக இருப்பதாக கடலோர மீனவர்கள் கூறுகின்றனர்.
எனினும் நாகை துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டிருப்பதால் முன் எச்சரிக்கை நலன்கருதி மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
நாகை துறைமுக முகத்துவாரத்தில் தமிழ்நாடு அரசின் கடல் சார் வாரியத்தின் மூலமாக ரூ.1 கோடி செலவில் தடுப்புஅணை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
வடக்கு கரையில் 120 மீட்டர் நீளத்திற்கும் தெற்கு கரையில் 70 மீட்டர் நீளத்திற்கும் கற்களாலும் கான்கிரீட்பிளாக்குகளாலும் ஆன தடுப்பு அணையை தாண்டி 4 அடி உயரம் வரை கடலலைகள் பொங்கி கடுவையாற்றில்கலந்து வருகிறது.
இதனால் தடுப்பு அணைகள் உடைக்கப்பட்டு விட்டது.
நாகை மா-வட்-டத்-தில் தொ-டர்ந்து பெய்து வரும் மழை-யால் வெள்ளப் பெருக்கு ஏற்-பட்-டுள்ளது. இதை கலெக்-டர்ரா-தா-கி-ருஷ்-ணன் பார்-வையிட்-ட-ார்.
காட்-டூர், மகேந்தி-ரம் பள்-ளி, ணித-லை-மேடு திட்டு, நா-தன் படு-கை, ஆச்-சாள்-பு-ரம் ஆகி-ய இடங்-க-ளில் உள்ளகுடி-யி-ருப்-பு-களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. 1,500 வீடுகள் வெள்ளத்-தில் மூழ்-கி-யுள்ள-து.
இந்த பகுதி மக்-கள் பா-து-காப்-பான இடங்-க-ளில் தங்-வைக்-கப்-பட்டு உண-வு வழங்-கப்-பட்டு வரு-கின்-ற-னர்.
நாகையில் தெத்தி, பழை-யா-று, தொ-டு-வாய், தரங்-கம்-பாடி, தா-ழம்-பேட்டை, செரு-தூர், வேளாங்-கண்ணி,கோ-னார்-தோப்பு ஆகி-ய இடங்-க-ளில் உள்ள சுனாமி தற்-கா-லிக குடி-யி-ருப்-பு-க-ளில் வெள்ளம் புகுந்-தது. இங்-கும்நிவா-ரண உத-வி-கள் வழங்-கப்-பட்டு வருகி-ற-து.
இது வரை மழைக்கு நா-கை-யில் 7 பேர் பலி-யா-கி-யுள்ள-னர் என்று கலெக்-டர் தெரி-வித்-தார்.