போலீசாருக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
நிவாரண உதவி மையத்தில் நெரிசலை தடுக்க போலீசார் தவறி விட்டதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. கூட்டநெரிசலை கட்டுபடுத்தி பாதுகாக்க வேண்டியது காவல் துறையினரின் பொறுப்பு. அவர்கள் அதைகவனிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.
10 நாட்களாக சென்னை மக்கள் பந்தாடப்படுகிறார்கள். இது தேவைதானா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.திமுக ஆட்சி காலத்தில் இது போன்ற நேரங்களில் திட்டமிட்டு பணியாற்றியுள்ளோம்.
அதிகாரிகள் சரியான வழிகாட்டாததால் ஏற்பட்ட விபரீதம் இது. எந்தப்பணியை உடனடியாக செய்ய வேண்டும்.எந்தப் பணி 10 நாட்களுக்கு பிறகு செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
போலீசார் இது போன்ற நேரங்களில் முன் கூட்டியே கூடுதல் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications