வலுவடைந்தது புயல்: மழை நீடிக்கும்
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் வலுவடைந்திருப்பதால் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.
தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம்கொண்டிருக்கும் காரணத்தால் சென்னைசென்னை நகரில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தற்சமயம் தென் மேற்கு வங்கக் கடலில்இலங்கை கடற்கரை அருகே மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு மத்திய வங்கக்கடலில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் வட தமிழகத்தின் கடற்கரையோரங்களில் பலத்த மழைபெய்யும் வாய்ப்புக்கள் உள்ளன.
இவ்வாறு மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள 650 சிறிய மற்றும் பெரிய ஏரிகள் வேக,வேகமாக நிரம்பி வருகின்றன.
20.20 அடி கொள்ளளவு உள்ள மதுராந்தகம் ஏரியில் 15 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
அதே போல் சென்னை நகரில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 14 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன்மொத்த உயரம் 24 அடி.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் அதிகபட்சமாக 12 செ.மீ., மழையும், சென்னை விமான நிலையம்,செங்கல்பட்டு, நாகையில் தலா 10 செ.மீ., மழையும், தாம்பரம், கடலூர், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோயில்மற்றும் திருத்துறைபூண்டியில் தலா 9 செ.மீ., மழையும், சீர்காழியில் 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.