For Daily Alerts
Just In
சென்னையில் கூடுதல் நிவாரண உதவி மையங்கள்
சென்னை:
சென்னையில் கூடுதல் நிவாரண உதவி மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று நிவாரண உதவி வாங்கச் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைதொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் நிவாரண உதவி பெற முடியாமல் மக்கள்அவதிப்படுகின்றனர்.
எனவே அவர்கள் நிவாரண உதவி உடனடியாக பெறும் வகையில் நிவாரண உதவி மையங்கள் எண்ணிக்கை 20லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான பணியில் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 1 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது.
இது வரை பாதிக்கும் மேற்பட்டோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
Comments
Story first published: Monday, November 7, 2005, 5:30 [IST]