சேலைக்கு ஆசைப்பட்டு உயிரிழந்த லட்சாதிபதி பெண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தரமான சேலை என்று நிவாரண உதவி தரும் இடத்திற்கு வாங்கச் சென்ற லட்சாதிபதி பெண்னும் பலியானார்.
வியாசார்பாடியில் வெள்ள நிவாரண உதவி தரும் மையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் பலியாயினர்.இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மளிகை கடை வியாபாரி துரைராஜ் என்பவரின் மனைவி கஸ்தூரி. இவர்வசதி படைத்தவர் என்பதால் பணத்துக்காக நிவாரண உதவி மையத்துக்கு போகவில்லை.
நிவாரண உதவியில் தரப்படும் சேலை தரமானதாகவுள்ளதாக அறிந்த கஸ்தூரி சேலை மீது ஆசைப்பட்டு அதைவாங்கச் சென்றுள்ளார்.
ஆனால் துரதிஷ்டவசமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதே போல வேடிக்கை பார்க்கச் சென்ற பல பெண்களும் காயமடைந்துள்ளதாக தெரிகிறது.
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை அமைச்சர்கள் பொன்னையன்,ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.












Click it and Unblock the Notifications