சென்னையில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் யார்டிலும், பேசின்பிரிட்ஜ் தண்டவாளங்களில் வெள்ளம் புகுந்ததால் ராட்சதமோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால் சென்ட்ரலிலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய ரெயில்கள் அனைத்திலும்காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இரவு 11.20 மணிக்கு சென்ட்ரலில் புறப்பட வேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டுசென்றது.
அதே போல சென்ட்டிரலுக்கு வர வேண்டிய ரெயில்கள் கால தாமதமாக வந்தன.
மங்களூர் எக்ஸ்பிரஸ் எக்ஸ்கிரஸ் காலை 6. 30 மணிக்கும், பெங்களூர் மெயில் 5.45 மணிக்கும் வந்து சேர்ந்தன.
தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் எழும்பூர் மார்க்கத்திலும்காலதாமதமாகவே ரெயில்கள் இயங்குகின்றன.
இதே போல மின்சார ரெயில்களும் காலதாமதமாகவே செல்கின்றன.












Click it and Unblock the Notifications