For Daily Alerts
Just In
தலைமை நீதிபதியாக ஏ.பி.ஷா 11ம் தேதி பதவியேற்பு
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி. ஷா நவம்பர் 11ம் தேதி பதவியேற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜூ டெல்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக மாற்றப்பட்டார்.இதையடுத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தினகர் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகபதவி வகிக்கும் ஏ.பி.ஷா நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி அப்துல் கலாம் பிறப்பித்துள்ளார்.
இதை தொடர்ந்து வருகிற 10ம் தேதி டெல்லியிலிருந்து சென்னை வரும் ஏ.பி. ஷா 11ம் தேதி சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார்.
கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா இவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். இதில் முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள்கலந்து கொள்கிறார்கள்.
Comments
Story first published: Tuesday, November 8, 2005, 5:30 [IST]