சென்னை மாநகராட்சியின் லேட் பிக்கப்!
சென்னை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதத்துக்குப் பின் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உணவுப் பொருள்,மறுவாழ்வுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
தொடர் கன மழை காரணமாக கடுமையாக பாதிப்படைந்துள்ள சென்னை மாநகரின் பல பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில்மிதக்கின்றன. கடந்த வாரம் பெய்த கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளமீட்பு மற்றும் மறு வாழ்வுப் பணிகளில் மெத்தனமாக இருந்தனர்.இந்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், இருப்பிடம் கிடைப்பதில் பெரும் குழப்பம்,தாமதம் ஏற்பட்டு பெரும் சிக்கலுக்கு ஆளாகினர். மாநகராட்சியின் இந்த தாமதப் போக்கினால் ஆவேசமடைந்த மக்கள் பலஇடங்களில் சாலை மறியல், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பில் இல்லாததாலும் துணை மேயர் தலைமறைவாக இருப்பதாலும் தலையில்லா முண்டமாகஇருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். மாநகராட்சி ஆணையர் விஜய்குமார் தான் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை நேரடியாககவனித்து வருகிறார்.
இந் நிலையில் கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு உடனடியாக ரியாக்ஷன் கொடுக்கத் தவறியதால் கடும் கண்டனத்திற்குஆளானது மாநகராட்சி நிர்வாகம். ஆனால், இந்தமுறை ஓரளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.
மாநகராட்சிக்குட்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட மக்களுக்கு நேற்று ஒரு நாள் மட்டும் 5 லட்சம் பேருக்கு உணவுசமைத்துத் தரப்பட்டது. மாநகராட்சிப் பள்ளிகளில் மீட்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று 3 லட்சம் பேருக்குஉணவு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கிக் கிடக்கும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க சிறப்புமருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வயிற்றுப் போக்கு தடுப்பு மருந்துகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கொசுக்கள் குவிவதைத் தடுக்க மருந்து அடிக்கப்படுகிறது. குளோரின் மாத்திரைகளும்வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 15 நடமாடும் மருத்துவ முகாம்களும் செயல்படத் தொடங்கியுள்ளன.
சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட தண்ணீர் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீர்வெளியேற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்தில் 24 மணி நேரமும் இயங்கும்வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆவேசத்தைத் தொடர்ந்து மீட்பு மற்றம் நிவாரணப் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகளை முடுக்கி விடஅமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா களத்தில் இறக்கி விட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications