ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள்: பெரும் பீதியில் தமிழகம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:


வங்கக் கடலில் ஏற்கனவே ஒரு புயல் சின்னம் (குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை), இருந்த இடத்தை விட்டுஅசையாமல் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை வெள்ளக் காடாக்கிக் கொண்டுள்ள நிலையில் இன்னொருகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வட தமிழகத்தையும், பாண்டிச்சேரியையும் பெரும்மிரட்டலுக்குள்ளாக்கியுள்ளது.

வங்கக் கடலில் ஏற்கனவே உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து கடந்த இரண்டுநாட்களாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது.

இதனால் 2 நாட்களாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்து தமிழகத்தின் ஒரு பகுதியையேவெள்ளக்காடாக்கியுள்ளது.

தற்போது இந்தத் தாழ்வு நிலை வலுவடைந்து மன்னார் வளைகுடா அருகே நகர்ந்து வட தமிழகம் முழுவதும்வியாபித்து நிற்கிறது.

இந் நிலையில் வங்கக் கடலின் மேற்குப் பகுதியில் இன்னொரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனத்த மற்றும்மிக கனத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் உட்புறப் பகுதிகளிலும் அனேக இடங்களில் நல்ல மழை இருக்கும் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வட தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர்வரும் வாய்ப்பு உள்ளதால், மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

மிக கன மழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூரிலிருந்து சென்னை வரை மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+