பழமுதிர்ச்சோலை முருகனுக்கு வைரவேல்!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
![]() |
அழகர்கோவில் மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகன் ஆலயத்துக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான வைரவேல் இன்றுகாணிக்கையாக வழங்கப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் பழமுதிர்ச்சோலை முக்கியமானது. இங்குள்ள முருகன், வள்ளி தெய்வானைக்கு பக்தர் ஒருவர்வைரவேலை காணிக்கையாக வழங்கினார்.
ஒன்றரை அடி உயரமுள்ள இந்த வேல் 800 கிராம் தங்கம், உயர்தர மிக்க 35 காரட் வைரங்களால் இழைக்கப்பட்டுள்ளது. சிவப்பு,பச்சை வைரங்களுடன் ஜொலி ஜொலித்த இந்த வைரவேலை மேள தாளங்கள் முழங்க கோவில் நிர்வாக அதிகாரியிடம் அந்தபக்தர் வழங்கினார்.
உற்சவ மூர்த்தி முருகன், வள்ளி-தெய்வானை சன்னதியில் வைத்து வைரவேலுக்கு பன்னீர், பாலபிஷேகம் செய்யப்பட்டது. பிறகுவைரவேலுடன் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.













Click it and Unblock the Notifications