கராத்தேவுக்கு முன் ஜாமீன் இல்லை
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனின் முன் ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம்தள்ளுபடி செய்துள்ளது.
கராத்தே தியாகராஜன் 1 மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் உத்திர பிரதேசம், டெல்லிஎன்று மாறி மாறி தலைமறைவாக இருந்து கொண்டு, காங்கிரசில் சேர முயற்சி செய்து வருகிறார்.இந்த சூழ்நிலையில் கராத்தேவை கைது செய்ய 5 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை வலைவீசிதேடிவந்தனர்.
இதனால் கராத்தே தெனாம்பேட்டை போலீசிலும், மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் தனக்கு எதிராக கொலைமிரட்டல் மற்றும் மோசடி பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு நீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த வழக்கில் ஜாமீன் கோருகிறார் என்பதுகுறித்து மனுதாரர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி முருகேசன், மனுதாரர் முன் ஜாமீன் பெற போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில்சமர்ப்பிக்க வேண்டும். அது அவரது கடமை.
அப்போது தான் நீதிமன்றம் மனுவை ஆராய்ந்து முடிவு செய்ய முடியும். ஊகத்தின் அடிப்படையில் முன் ஜாமீன் தரஇயலாது என்று கூறி கராத்தேவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.