உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மனு
Subscribe to Oneindia Tamil
![]() |
திருவண்ணாமலை நீதமன்றத்தில் தன் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை விசாரிக்கத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பெண்களின் கற்பு குறித்து கருத்துக் கூறிய குஷ்புவைக் கண்டித்து 20க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் வழக்குதொடரப்பட்டுள்ளது. இதில் பல வழக்குகளில் குஷ்புவுக்கு நீதிமன்றங்கள் சம்மன் அனுப்பியுள்ளன.
இதில் ஒரு சம்மனுக்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந் நிலையில் திருவண்ணாமலைநீதிமன்றம் பிறப்பித்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குஷ்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வரும் 16ம் தேதி குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி குஷ்பு தாக்கல் செய்த மனு நீதிபதி பானுமதி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.













Click it and Unblock the Notifications