இன்றும் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை
சென்னை:
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் மிக பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்எச்சரித்துள்ளது.
சென்னை நகர் மற்றும் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. வங்கக் கடலில்உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கும் நகராமல் அப்படியே நிலை கொண்டுள்ளது.இதனால் தமிழகத்தின் வட பகுதிகளில் கன மழை நீடித்து வருகிறது. இந் நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சிநிலைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அப்படியே உள்ளது. அது தற்போது வலுவடைந்திருப்பதால்,தமிழகத்தின் வட மாவட்டங்கள், சில உட்புற மாவட்டங்கள், புதுவையில் இன்று மணிக்கு 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில்சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்யும்.
சென்னை நகரில் விட்டு விட்டுக் கன மழை பெய்யும். சூறைக் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனஎச்சரித்துள்ளார்.
இந்த மழை மேலும் 36 மணி நேரம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் இன்னும் 36 மணி நேரத்தில் மழை என்னென்னசேதங்களை ஏற்படுத்தப் போகிறதோ என்ற பீதியில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications