பாரிஸ் நகரில் அவசரகால நிலை பிரகடனம்
பாரிஸ்:
பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த அங்குஅவசரகால நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந் நாட்டில் அவசரகால நிலை அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.பிரான்சின் ஆக்கிரமிப்பில் இருந்து ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான கருப்பர் இன மக்கள் பாரிசில்குடியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள். பிரான்சில் இவர்கள் நிற, இன, மத பேதக்குக்கு ஆளாகிவருகின்றனர்.
குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோதமாகக் குடியேற்றம் செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்தவாரத்தில் இப் பகுதியில் நடந்த கலவரத்தையடுத்து போலீஸ் சுட்டதில் இரு கருப்பர் இன வாலிபர்கள் பலியாயினர்.
அன்று முதல் இந்தப் பகுதிகளில் பெரும் வன்முறை நடந்து வருகிறது. இதுவரை 2,500க்கும் அதிகமான கார்கள்எரிக்கப்பட்டுள்ளன. கட்டடங்கள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
இதையடுத்து வன்முறையைக் கட்டுப்படுத்த அந்தப் பகுதிகளில் அவசரகால நிலையை பிரான்ஸ் பிரகனடப்படுத்தியுள்ளது.
அத்தோடு இந்த பிற்பட்ட பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக பல புதிய திட்டங்களையும் அந் நாட்டுப்பிரதமர் டொமினிக் டி வில்லிபின் அறிவித்துள்ளார்.
கல்வியறிவும் வருவாயும் குறைவான அளவில் உள்ள இந்தப் பகுதியினருக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும்,இனரீதியிலான பேதத்தை ஒழிக்கவும் திட்டங்களை அறிவித்துள்ளார்.