எய்ட்சுக்கு மருந்து: இந்தியா கண்டுபிடிக்கும்-கலாம் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்தியா மருந்து கண்டுபிடிக்கும் என்று ஜனாதிபதிஅப்துல்கலாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இது குறித்து நடந்த இந்திய-ஆப்பிரிக்கா ஒப்பந்தத் திட்டக் கூட்டத்தில் கலந்து கொண்ட கலாம்பேசியதாவது:எய்ட்ஸ் மற்றும் எச்ஐவிக்கு இந்தியா மருந்து கண்டுபிடிக்க 5 ஆண்டுகள் ஆகும். இருந்தாலும் அடுத்த 2ஆண்டுகளுக்குள் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்ஆகும்.
புனேவைச் சேர்ந்த தேசிய எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ள எச்ஐவிக்கான மருந்து, சென்னைகாசநோய் ஆராய்ச்சி மையத்தில் இந்த ஆண்டில் சோதனைக்குட்படுத்தப்படும்.
மேலும் மருத்துவ துறை நிபுணர்கள் எ மற்றும் பி வைரஸ்களை கட்டுப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கும்பணியிலும் ஈடுபடவேண்டும். இந்த முயற்சியில் இந்தியாவும் ஆப்பிரிக்க நாடுகளும் இணைந்து பணியாற்றலாம்என்றார்.












Click it and Unblock the Notifications