காரைக்கால்: கடலில் படகு கவிழ்ந்து 4 பேர் பலி?
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்:
காரைக்கால் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது.
நாகப்பட்டினம் துறை முகத்துக்கு கப்பலில் வரும் சரக்குகளை எளிதாக இறக்குவதற்கு வசதியாக காரைக்கால் டிஆர் பட்டினம்அருகே பார் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இதற்கான பணியை செய்துவருகிறது.100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியாளர்களுக்கு நாகூர் வடக்கு பட்டினச் சேரியில் இருந்துஒரு விசைப் படகில் நேற்று மதியம் உணவு கொண்டு செல்லப்பட்ட போது படகு கவிழ்ந்து 4 பேர் கடலில் மூழ்கினர். இதில்ஒருவர் உயிர் தப்பினார்.
கடலில் மூழ்கிய 4 பேர் என்ன ஆனார்கள் என்று இதுவரை தகவலில்லை. கடல் அலை சீற்றம் அதிகமாக இருப்பதால் 4 பேரும்பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது வரை அவர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்படவில்லை.
அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications