முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மரணம்
டெல்லி:
![]() |
முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் இன்று மாலை காலமானார்.
நிமோனியா தாக்குதலையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் டெல்லி ராணுவ மருத்துவ ஆராய்ச்சி மையத்தில்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம்அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் அவரது சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டன. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்துசிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று மாலை 5.45 மணியளவில் அவர் காலமானார்.
முன்னதாக அவர் காலையிலேயே இறந்துவிட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால், அத் தகவலை ராணுவ மருத்துவமனைவட்டாரங்கள் மறுத்தன. அவரது நிலைமை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் மாலையில் அவர் உயிர் பிரிந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனைக்குச் சென்று நாராயணனைப் பார்த்தார். மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.
கேரளத்தைச் சேர்ந்த நாராயணன் 1920ல் பிறந்தவர். துணை ஜனாதிபதியாக இருந்து பின்னர் ஜனாதிபதியானவர். இந்தியஜனாதிபதியான முதல் தலித் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி விரிவுரையாளராக தனது பணியைத் துவக்கிய நாராயணனன், பின்நர் த இந்து மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா ஆகியநாளிதழ்களிலும் பணியாற்றினார். இதையடுத்து லண்டனில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார்.
அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கோரிக்கையை ஏற்று நாடு திரும்பிய நாராயணன், அவரது யோசனைப்படிஇந்திய வெளியுறவுத்துறை பணியில் சேர்ந்தார்.
பர்மா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தூதரகஅதிகாரியாகவும், தூதராகவும் பணியாற்றினார். பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளரானார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்துள்ளார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியின்சார்பில் 3 முறை கேரளத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய திட்டத்துறை, வெளியுறவுத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
பர்மாவில் தூதராக இருந்தபோது அந் நாட்டைச் சேர்ந்த உஷாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். நாராயணன்-உஷாதம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இப்போது உஷாவும் உடல் நிலை குன்றியுள்ளார்.
இந்திய-அமெரிக்க உறவு உள்பட பல புத்தகங்களையும் நாராயணன் எழுதியுள்ளார்.
கடந்த பாஜக ஆட்சியின்போது பிகாரில் லாலு பிரசாத் அரசைக் கலைக்க வாஜ்பாய் அரசு இரு முறை பரிந்துரை செய்தபோதும்அதை ஏற்க மறுத்தவர் நாராயணன். இதனால், இவருக்கு மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பைத் தர பாஜக மறுத்துவிட்டது.













Click it and Unblock the Notifications