அமைதி பேச்சு: இலங்கை குழு தலைவர் விலகல்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சு நடத்த இலங்கை அரசு அமைத்த குழுவின் தலைவரான ஜெயந்தா தனபாலா தனதுபதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான செயலகத்தின் தலைவராக இவர் இருந்து வந்தார்.இந் நிலையில் ஐநா பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் இலங்கையின் சார்பில் இவரை நிறுத்த அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா முடிவு செய்துள்ளார். முன்னதாக டைரோன் பெர்னாண்டோவை இந்தப் பதவிக்கு போட்டியில் நிறுத்த சந்திரிகாதிட்டமிட்டார்.
ஆனால், திடீரென முடிவை மாற்றிக் கொண்டு தனபாலாவின் பெயரை முன் மொழிந்தார்.
இந் நிலையில் தான் தனது பதவியை தனபாலா ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை சந்திரிகா ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் சர்மினி செரசிங்கே கூறுகையில், தனபாலாஇப்போது ஸ்டாக்ஹோமில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். மேலும் பல நாடுகளுக்குச் செல்லும் தனபாலாஅடுத்த மாதம் தான் நாடு திரும்புவார் என்றார்.