மதுரை சட்ட கல்லூரி மாணவி படுகொலை
ஆண்டிப்பட்டி:
மதுரை சோழவந்தானைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, ஆண்டிப்பட்டி அருகே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு,கல்லைக் கட்டி குளத்தில் வீசப்பட்டிருந்தார்.
சோழவந்தான் மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிநயா. மதுரை சட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வந்தார். 19வயதாகும் அபிநயாவுக்கும், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் இடையேகாதல் ஏற்பட்டது.இருவரும் அடிக்கடி சந்தித்து அன்பையும், காதலையும் பரிமாறிக் கொண்டனர். அபிநயாவை அடிக்கடி தேனிக்கும்,ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கும் பாண்டியராஜன் அழைத்துச் செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
இந் நிலையில் அபிநயாவின் உடலை ஆண்டிப்பட்டி போலீஸார், அங்குள்ள குளம் ஒன்றிலிருந்து மீட்டுள்ளனர். அவரது உடலில்குத்திக் குத்துக் காயங்கள் உள்ளன. உடலில் கல்லைக் கட்டி குளத்தில் போட்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே உடல் கிடைத்துள்ளதால், பாண்டியராஜன்தான் இதை செய்திருக்கக் கூடும் என போலீஸார்சந்தேகிக்கின்றனர். தலைமறைவாகி விட்ட பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உள்பட 3 பேரையும் போலீஸார்தீவிரமாக தேடி வருகின்றனர்.