சுய நிதி கல்லூரிகள்: நீதிமன்ற தலையீட்டை தடுக்க சட்ட திருத்தம்
சென்னை:
சுயநிதி கல்லூரிகள் மீதான அரசின் அதிகாரத்தில் நீதிமன்றத் தலையீடுகளைத் தடுக்க அரசியல் சட்டத் திருத்தம்கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங்குடன் பேச்சு நடத்தினார். இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அன்புமணிகூறியதாவது:சுயநிதி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை, கட்டணம் ஆகியவற்றை அரசு கட்டுப்படுத்த இந்த புதிய சட்டம்பயனுள்ளதாக இருக்கும் என்றும், இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அர்ஜூன் சிங்தெரிவித்தார்.
மேலும் இந்த மசோதா குறித்து பா.ஜ.க மற்றும் இடது சாரி கட்சிகளுடன் அர்ஜூன் சிங் ஏற்கனவே பேசியுள்ளார்.அவர்கள், இந்த புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகதெரிவித்துள்ளனர் என்றார்.
உடனிருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த கருத்தை தான் நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்துள்ளோம். தற்போது மத்திய அரசு அதைநிறைவேற்ற முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கட்டணம் மட்டுமின்றி கல்லூரிகளின் அலுவலகசெயல்பாடுகளும் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற மாற்று சட்ட திட்டம் ஒன்றையும் அர்ஜூன்சிங்கிடம் நாங்கள் கொடுத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications