வேப்பெண்ணெய் குடித்த போலீஸ்காரர் சுருண்டு விழுந்து சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
உடல் சூட்டைத் தணிப்பதற்காக அதிக அளவில் வேப்பெண்ணெயை அருந்திய போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் மருதபாண்டி. ஆயுதப் படை காவலர். 25 வயதாகும் மருதபாண்டி, உடல் சூடு அதிகமாகஇருந்ததால், தினசரி வேப்பெண்ணெயை குடித்து வந்துள்ளார். திங்கள்கிழமை காலை அவருக்கு கடுமையான வயிற்று வலிஏற்பட்டுள்ளது.
உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருதபாண்டி உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக வேப்பெண்ணெய் குடித்ததால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications