செளதியில் மத சுதந்திரம் இல்லை: அமெரிக்கா
வாஷிங்டன்:
செளதி அரேபியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் மதச் சுதந்திரமே இல்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.அதே நேரத்தில் இந்த விஷயத்தில் இந்தியா நல்ல முன்னேற்றம் காட்டி வருகிறது என அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,செளதி அரேபியா, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் தவிர்த்து மற்ற மதத்தினருக்கு மதச் சுதந்திரம் முழுமையாகவேமறுக்கப்படுகிறது. இங்கு மதச் சுதந்திரமே சுத்தமாக இல்லை என்றே கூறலாம்.
இஸ்லாம் தான் அதிகாரப்பூர்வ மதமாக உள்ளது. குடிமக்கள் அனைவருமே இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என்றஅளவுக்கு நிர்பந்தம் உள்ளது.
இஸ்ரேலில் இஸ்லாமிய அரேபியர்கள், கிருஸ்துவர்கள் ஆகியோரின் மத உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவர்களுக்கு வீடுகள்ஒதுக்குவதில் ஆரம்பித்து, கல்வி, வேலைவாய்ப்புகளிலும் பேதம் காட்டப்படுகிறது.
அரேபியர்கள், கிருஸ்துவர்களின் அடிப்படை உரிமைகளை இஸ்ரேல் மறுப்பதால் தான் அரபு நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும்இஸ்ரேலுடன் எப்போதுமே பதற்றம் உச்சத்தில் உள்ளது.
அதே போல பிரான்சிலும், ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் பிற மதத்தினர் என்றாலே ஏதோ ஆபத்தான பிரிவினர் என்பதுபோன்ற தோற்றம் உள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகள் சட்டப்பூர்வமாகவே உள்ளன. அங்கு சிறுபான்மையினருக்கு எதிரானசட்டங்கள் அமலில் உள்ளன.
அதே போல பர்மா, எரிட்ரியா, சீனா, இரான், வட கொரியா, சூடான், வியட்நாம் ஆகியவற்றில் மதச் சுதந்திரம் மதிக்கப்படுவதேஇல்லை.
இந்தியாவில் ஆட்சிக்கு வந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மதசார்பின்மையைக் கடைபிடித்து வருகிறது. சில பிரச்சனைகள்இருந்தாலும் இந்தியாவில் மதச் சுதந்திரத்தைக் காப்பதில் முன்னேற்றம் காணப்படுகிறது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்தாலும் சில மாநில அரசுகளின் (குஜராத்?) செயல்பாடுகள் திருப்திகரமாகஇல்லை.
அதே போல ஜார்ஜியா, துர்க்மேனிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகளிலும் அனைத்து மதத்தினருக்கும் சம சுதந்திரம் கிடைப்பதில்முன்னேற்றம் காணப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications