இந்தியா- இலங்கை கிரிக்கெட்:: ரூ.7.45 கோடிக்கு இன்சூரன்ஸ்
வதோதாரா:
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையே வருகிற 12ம் தேதி பரோடாவில் நடக்க இருக்கும் 7வது மற்றும் கடைசி ஒரு நாள்கிரிக்கெட் போட்டியை ரூ.7.45 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர்.
இது குறித்து பரோடா கிரிக்கெட் சங்க தலைவர் சிராயு அமின் கூறியதாவது:
இந்த விளையாட்டு போட்டியை இன்சூரன்ஸ் செய்வதன் மூலம், விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறுஎதாவது பொது சொத்துக்கு அசம்பாவிதம் ஏற்பட்டாலோ உதவியாக இருக்கும்.
மேலும் கிரிக்கெட் ஸ்கோர், போட்டியின் நிலவரம் குறித்து உடனுக்குடன் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில்ஸ்டேடியத்தில் பெரிய எல்சிடி திரை அமைக்க உள்ளோம்.
அது மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களது உடைமாற்றும் அறை, ஓய்வுஅறைகளுக்கு இன்டர்னெட் மூலம் வயர்லஸ் தொலைபேசி வசதியும் செய்துள்ளோம் என்றார்.
இதை தொடர்ந்து இந்த கடைசி ஒரு நாள் போட்டி முடிந்த பிறகு தேசிய கிரிக்கெட் வாரியம் தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியாமோதவுள்ள 5 ஒரு நாள் போட்டிகளில் இடம்பெறவிருக்கும் அணி வீரர்களை தேர்ந்தெடுக்க உள்ளது என்று தேர்வுக்குழுவின்தலைவர் கிரன் மோரே கூறினார்.
தென் ஆப்பிரிக்காவுடன் ஆடவுள்ள போட்டிகளுக்கும் ராகுல் டிராவிட் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்று தெரிகிறது. இந்தபோட்டி ஹைதராபாத்தில் வருகிற 16ம் தேதி தொடங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications