For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தை தடுத்த 2 திமுக உள்ளாட்சித் தலைவர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அருகே மழை நீரைத் தடுத்ததாக 2 திமுக பேரூராட்சித் தலைவர்களை போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர்.

கன மழையால் சென்னைப் புறநகர்ப் பகுதியில் உள்ள பல ஏரிகள் நிரம்பி வழிகின்றன. சில ஏரிகளில் உபரி நீர்கால்வாய் மூலமாக போக வழியில்லாததால், ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல இடங்களில் ஏரிக் கரைகளை, அங்கு ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருவோர், தங்களது வீடுகளைக் காத்துக்கொள்ள கரைகளை உடைத்து தண்ணீரை ஊருக்குள் வெளியேற்றி வருகின்றனர்.

இவ்வாறு ஊருக்குள் வரும் மழை நீரைத் தடுத்ததாக கூறி 2 திமுக பேரூராட்சித் தலைவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

மதுரவாயல் ஏரியில் அதிக அளவில் உபரி நீர் வெளியேறி வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் உள்ளிட்ட சிலபகுதிகளில் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதிகள் மிதக்கின்றன.

இந் நிலையில் வளசரவாக்கம் பகுதிக்குள் வரும் மழை நீரை வளசரவாக்கம் திமுக பேரூராட்சித் தலைவர்மதியழகனும், பிற திமுகவினரும் சேர்ந்து அடைப்பு போட்டு தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு பகுதிகளில்மழை நீர் திரும்பி பெரும் இடையூறை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுரேஷ் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் மதியழகனை போலீஸார் கைது செய்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டதைத் தொடர்ந்து மதியழகன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல, நெற்குன்றம், கந்தசாமி நகருக்குள் வந்த மழை நீரைத் தடுத்து வேறு பகுதிக்குத் திருப்பி விட்டதாகநெற்குன்றம் திமுக பேரூராட்சித் தலைவர் பரமசிவம் மீது போலிஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்அடிப்படையில் அவரும் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த இரு கைதுகளையும் எதிர்த்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் திமுகவினரும், அந்தப் பகுதி பொது மக்களும்சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X