For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்சில் வன்முறை தொடர்கிறது: ஊடரங்கு அமல்

By Staff
Google Oneindia Tamil News

பிரான்ஸ்:

அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் பிரான்சில் தொடர்ந்து வன்முறை நடந்து வருவதால் பல்வேறு நகர்களில்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட இரு கருப்பர் இன வாலிபர்களை போலீசார் துரத்தியபோதுஅவர்கள் தப்பியோடினர். மின் கம்பத்தில் தாவிக் குதித்தபோது மின்சாரம் தாக்கி இருவரும் பலியாயினர்.

இதையடுத்து பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் வன்முறை வெடித்தது. பிரான்சில் வசிக்கும் ஆப்பிரிக்க, இஸ்லாமியநாடுகளைச் சேர்ந்த வாலிபர்கள் கலவரத்தில் இறங்கினர். இந்தக் கலவரம் பிரான்சின் பிற பகுதிகளுக்கும் பரவிவிட்டது.

இதையடுத்து அவசரகால நிலையை அந் நாடு பிரகடனப்படுத்தியது. ஆனாலும் வன்முறை ஓயவில்லை. தொடர்ந்து அங்குகலவரமும், தீ வைப்பும், கொள்ளைச் சம்பவங்களும், கல்வீச்சும் நடந்து வருகின்றன.

இதனால் 36 நகர்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளில் 5,500க்கும் அதிகமான கார்கள்எரிக்கப்பட்டுள்ளன. பல வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன. வீடுகள், கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X