ஜெயேந்திரர் வழக்கு: 28 முதல் பாண்டிச்சேரியில் விசாரணை
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 28ம் தேதி முதல் பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குசெங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் இதுவரை விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆனார். மற்ற 24 பேர் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டு விட்டது.
இந் நிலையில் வழக்கை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் சார்பில்உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கில் முதல்வர்ஜெயலலிதாவின் நேரடி தலையீடு இருப்பதால் அதை பாண்டிச்சேரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றிஉத்தரவிட்டது.
இந் நிலையில், செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நேற்று கடைசியாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது 21 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். கதிரவன், ஜெயேந்திரர், விஜயேந்திரர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
பின்னர் நீதிபதி அக்பர் அலி, இவ்வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாண்டிச்சேரி அமர்வு நீதிமன்றத்திற்குமாற்றப்படுகிறது. வருகிற 28ம் தேதி பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கண்டிப்பாகஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications