விலகியது ஒரு புயல் சின்னம்: இன்னும் 36 மணி நேரத்திற்கு கன மழை தொடரும்
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியிருந்த இரண்டு புயல் சின்னங்களில் ஒன்று அரபிக் கடல் நோக்கி நகர்ந்துவிட்டது.இன்னொரு புயல் சின்னம் வங்கக் கடலில் அதே இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் இன்னும் 36 மணிநேரத்தில் தமிழகத்தின் வட பகுதி மற்றும் உட்புறப் பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சிநிலையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே இரண்டு குறைந்த காற்றழுத்த புயல் சின்னங்கள்உருவாகியிருந்ததால், வட தமிழகத்தில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட்ட வட மாவட்டங்களில் புதன்கிழமை முழுவதும் கன மழைபெய்தது. சென்னையிலும் பல இடங்களில் கன மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில் தூறல் மழை இருந்தது.
இந் நிலையில், இரண்டு புயல் சின்னங்களில் ஒன்று அரபிக் கடலை நோக்கி நகர்ந்து சென்று விட்டது. இன்னொருபுயல் சின்னம் ஏற்கனவே உள்ள இடத்தில் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.
இதன் காரணமாக வட மாவட்டங்கள், புதுவை மற்றும் தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் அடுத்த 36 மணிநேரத்திற்கு கன மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
சென்னை நகரில் விட்டு விட்டு மழை பெய்யும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications