சேலத்தில் 3 பேர் கொடூரக் கொலை: நகை, பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் வெள்ளி வியாபாரி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 3 பேரையும் கழுத்தை அறுத்து கொடூரமாகக்கொலை செய்து விட்டு நகை, பணத்தைத் திருடிச் சென்றனர்.
சேலம் மூங்கம்பாடி பகுதியில் வசித்து வந்தவர் மோகன் ராவ். வெள்ளி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். புதன்கிழமை இரவுமோகன் ராவ், மனைவி ஷீலா, 13 வயது மகன் பிரேம் ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது இரவில் வீட்டிற்குள் புகுந்த சிலர், 3 பேரையும் மிகக் கொடூரமாக கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு தப்பி விட்டனர்.
மோகன் ராவ் பல நகைக் கடைகளுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். பல கடைகளின் சொத்துப் பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு கறாராக இருந்துள்ளார். இதனால் பண விஷயம் காரணமாகக் கூட இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனபோலீஸார் சந்தேகிக்கின்றனர். 3 பேரைக் கொலை செய்த கும்பலைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications