தொடர் மழை நின்றது; வெயில் வந்தது
சென்னை:
கடந்த இரு வாரங்களாக வட தமிழகத்தை வாட்டி எடுத்து வந்த தொடர் மழை இன்றுடன் நின்றது. பல பகுதிகளில்மீண்டும் வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது.
வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாகி வட தமிழகத்தை கடந்த இரு வாரங்களாக கனமழையால் நனைத்து வந்தது. மழை வெள்ளத்தில் மூழ்கிய வட மாவட்டங்கள் தட்டுத் தடுமாறி விட்டன.இந் நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஒரு புயல் சின்னம் அரபிக் கடலுக்குப் போய் விட்டது.இன்னொரு புயல் சின்னம் தற்போது வலுவிழந்து விட்டதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் வலுவிழந்து விட்ட காரணத்தால், சென்னை உள்பட வட தமிழகத்தில் இன்று காலை முதல் மழைகுறைந்து விட்டது. சென்னையில் இன்று பிற்பகல் முதல் வெயில் அடிக்கத் தொடங்கிவிட்டது.
இதேபோல வட மாவட்டங்கள் பலவற்றிலும் இன்று மழை இல்லை.
காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களிலும் மழை குறைந்து விட்டது. இதன் காரணமாக மக்கள் சிறிது நிம்மதிஅடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications