For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் போகலை புயல் சின்னம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நகராமல் அதே இடத்தில்இருப்பதால் வடக்கு கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் இன்று காலை முதல் அடுத்த 24 மணி நேரத்திற்குபரவலாக மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான இரு புயல் சின்னங்களினால் கடந்த 2 வாரங்களாக தமிழகத்தின் வட பகுதி முழுவதும்தொடர்ந்து கன மழை பெய்து வெள்ளக் காடாக்கி விட்டது.

இந் நிலையில் ஒரு புயல் சின்னம் நகர்ந்து அரபிக் கடலுக்குப் போய் விட்டது. இன்னொரு புயல் சின்னம்வலுவிழந்து விட்டதாக நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் நேற்று தெரிவித்தது.

இந் நிலையில் மழை நின்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. ஆனால், வலுவிழந்த புயல் சின்னம் கலையாமல்தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதாக இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வடக்குக் கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து பரவலாகமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

தென் தமிழகத்தில் மணியாச்சி, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் ஓரிரு இடங்களில் தூறல் மழை இருந்தது. வானம் பொதுவாக மேகமூட்டமாகவே காணப்படுகிறது.வட மாவட்டங்களில் சிலவற்றில் லேசான மழை பெய்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X