தமிழக- வட மாநில ரயில்கள் இயங்கத் தொடங்கின
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பல வட மாநில ரயில்கள் மீண்டும் சென்னையில் இருந்து இயங்கத்தொடங்கியுள்ளன.
ஆந்திர மாநிலம் கூடுர்-விஜயவாடா மார்க்கத்தில், கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ரயில் பாதைகள்சேதமடைந்திருந்தன. இதன் காரணமாக சென்னையிலிருந்து இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து வடமாநில ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன அல்லது வேறு பாதையில் ஓடிக் கொண்டிருந்தன.தற்போது ஆந்திராவில் மழை நின்றுள்ளதாலும், ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டிருப்பதாலும் சென்னையிலிருந்துகூடூர்-விஜயவாடா மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், சென்னை சென்ட்ரல்-சண்டிகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மதுரை-ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வெள்ளிக்கிழமையும் (இன்று) ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரை- நிஜாமுதீன் தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications