அபுசலேமுடன் அசாருதீனுக்கு தொடர்பு: திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அபுசலேமுடன் அசாருதீன் அவரது மனைவி சங்கீதா, நடிகர்கள் கோவிந்தா-சஞ்சய்தத் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்ட தாவூத் இப்ராகிம் கூட்டாளி அபுசலேம்அவரது காதலி மோனிகா பேடி ஆகியோர் போர்ச்சுக்கல் நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களை சிபிஐ அதிகாரிகளிடம் போர்ச்சுக்கல் அரசு ஒப்படைத்தது. நேற்று அவர்கள்தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 23ம் தேதி வரைகாவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அபுசலேம் மோனிகா பேடி போர்ச்சுக்கல்லில் தங்கியிருந்த போது அவர்களுக்கு உதவி செய்தது யார் அங்குஎன்னென்ன செய்தார்கள் என்பதை சிபிஐ விசாரணை நடத்தியது.

அப்போது இந்திய கிரிக்கெட் வீரர் அவரது மனைவி, நடிகர்கள் சிலர் ஆகியோர் அபுசலேமின் வங்கிக் கணக்கில் பணம் போட்டுஉதவியிருப்பது தெரிய வந்தது.

அபுசலேமுடன் தொடர்பு வைத்து இருந்தது முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் என்பது தெரியவந்துள்ளது. மேலும்அவருக்கு உதவிய நடிகை (அசாருதீனின் மனைவி) சங்கீதா பிஜ்லானி என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டில் அபுசலேமும், மோனிகா பேடியும் வழக்கை சந்திக்க இவர்கள் பண உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அபு சலேம் விவகாரத்தில் நடிகர் கோவிந்தா, சஞ்சய்தத் ஆகியோரும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர பட அதிபர் குல்சன்குமார் உள்பட பல சினிமா பிரபலங்கள் கொலை வழக்கு பற்றியும் விசாரிக்கப்படும் போது நடிகர்சல்மான்கான்-ஐஸ்வர்யாராய் தொலைபேசி மிரட்டல் விவகாரத்திலும் திடுக்கிடும் திருப்பம் ஏற்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களிடம் சிபிஐ அபுசலேமின் முன்னிலையில் விசாரணை நடத்தவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+