சுயநிதி கல்லூரி இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு திமுக பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவுக்குதிமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கு கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில்,
இது தொடர்பான சட்டத் திருத்தத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன். இதன் மூலம் தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த இட ஒதுக்கீட்டை அமலாக்க மறுக்கும் கல்லூரிகளின் நிர்வாகங்களை மாநில அரசுகளே எடுத்த நடத்தவும் இந்தச் சட்டம்வகை செய்கிகிறது.
இதன்மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மாணவ, மாணவிகளின் இட ஒதுக்கீட்டுக்கு அரசியல் சட்டரீதியிலான உத்தரவாதம்அளிப்பதற்கான முயற்சி ஆரம்பித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications