பழைய கேள்வி தாளுக்கு 3 மணி நேரம் பதில் எழுதிய பி.காம் மாணவர்கள்!!!!!

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

நெல்லை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் குளறுபடி நடந்ததால் மாணவர்கள் கொதிப்படைந்தனர்.

இப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடந்து கொண்டுள்ளது.

ஒரு கல்லூரியில் ஒரே அறையில் பிகாம் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தேர்வுஎழுதினார்கள்.

இதில் பிகாம் மூன்றாமாண்டு ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் 7 பேருக்கு 2003ம் ஆண்டுக்கான பழைய கேள்வித்தாள் தரப்பட்டது. அவர்களும் அதை கவனிக்காமல் 3 மணி நேரம் தேர்வு எழுதினர்.

பிறகு தான் மாணவர்களுக்கு கேள்வித்தாள் மீது சந்தேகம் எழுந்தது. இது பற்றி தேர்வு மேற்பார்வையாளரிடம்கூறினார்கள். அப்போது தான் தேர்வில் குளறுபடி நடந்திருப்பது தெரியவந்தது.

இதனால் தேர்வு அறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே கல்லூரி முதல்வர் அங்கு வந்து மாணவர்களைசமாதானப்படுத்தினார். மறு தேர்வு எழுதுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் கேட்ட போது, கேள்வித்தாள் மாறியது உண்மைதான். எங்கள் மீது தவறில்லை.முதலிலேயே மாணவர்கள் இதை கவனித்திருக்க வேண்டும். 3 மணி நேரம் தேர்வு எழுதிய பிறகு தான் அவர்கள்கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இது பற்றி நாங்கள் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். இனிஅவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+