நட்டாற்றில் தவிக்கும் கராத்தே
டெல்லி:
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜனை காங்கிரஸ் கட்சியும் சேர்த்துக் கொள்ள தயக்கம்காட்டுவதால் நட்டாற்றில் தவிக்கிறார் காரத்தே.
சென்னையிலிருந்து திடீரென தலைமறைவான கராத்தே டெல்லியில் தங்கியிருந்து காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சிசெய்து வந்தார். அதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரிடம் முறைப்படி விண்ணப்பம் அளித்தார்.அது தொடர்பாக அம்பிகா சோனி, மோதிலால் வோரா, அகமது படேல் ஆகிய மூவர் குழு பரிசீலித்தது. அப்போதுஅக்குழு பல கேள்விகளை எழுப்பியது.
அதிமுகவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? உங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்எப்படிப்பட்டவை. அதில் உண்மை இல்லை என்றால் இவ்வளவு நாட்கள் தலைமறைவாக இருப்பது ஏன்?
அதிமுக தலைமையுடன் மோதல் ஏற்பட உண்மையான காரணம் என்ன என்று கராத்தேவிடம் கேட்டது. ஆனால்எந்த கேள்விக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும், நம்பத்தகுந்த வகையிலும் அவர் பதலளிக்கவில்லைஎன்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஏற்கனவே காங்கிரஸில் இருந்து சென்றவராக இருந்தாலும் கூட தற்போது அவர் மீதான நம்பகத்தன்மைமுற்றிலும் போய்விட்டது. மாநில காங்கிரஸ் தலைமையும் அவரை கட்சியில் சேர்க்க பரிந்துரை செய்யவில்லை.
அவரை கட்சியில் சேர்த்தால் உள்கட்சியில் பிரச்சினை ஏற்படுத்திவிடும் என்றும் தேர்தல் நேரத்தில் இந்தபிரச்சினை தலைவலியாக ஆகிவிடக்கூடாது என்றும் காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது.
வாழப்பாடி ராமமூர்த்தியையே கட்சியில் சேர்த்துக் கொள்ள கட்சி மேலிடம் 6 மாதங்கள் எடுத்துக் கொண்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று தமிழகத்திலிருந்து தினசரி நூற்றுக் கணக்கானகடிதங்கள் வருகின்றன. அதுவும் மேலிடத்தின் தயக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் எத்தனை மாதங்கள் ஆனாலும் காங்கிரஸில் சேர்ந்த பிறகே சென்னை திரும்பப் போவதாக கராத்தேகூறியிருப்பாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.