For Daily Alerts
Just In
மதுரையில் விடிய விடிய கன மழை
மதுரை:
மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துஓடுகிறது.
வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் அரபிக் கடல் பக்கமாகசென்றுவிட்டது. ஆனால், இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வங்கக் கடலில் தமிழகத்தையொட்டிநிலை கொண்டுள்ளது.அது வலுவிழந்துவிட்டாலும் கூட மழை தொடர்கிறது. இதுவரை வட மாவட்டங்களையும் கடலோரமாவட்டங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்த இந்த மழை, நேற்று முதல் மதுரை மாவட்டத்தையும் பதம் பார்த்துவருகிறது.
மதுரையில் நேற்று மாலையில் மேகமூட்டம் காணப்பட்டது. நேற்று இரவு மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்கனமழை பெய்தது. தொடர்ந்து நகர் பகுதியிலும் கனமழை கொட்டியது. விடிய, விடிய பெய்த மழையால் மதுரைநகர் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
அதே போல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருகிறது.
Comments
Story first published: Saturday, November 12, 2005, 5:30 [IST]