ஈழப் பெண்களின் இன விடுதலைப் போராட்டம்: வைகோ
சென்னை:
பெண்களை மதிக்கும் இயக்கம் மதிமுக என்று அதன் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னையில் நடந்த கட்சியின் விழாவில் மதிமுக மகளிர் அணி தொண்டர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்பேசியதாவது:தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பி காங்கிரஸ் கட்சியில் அடியெடுத்து வைத்தபோது தொண்டர்படை அணிவகுப்பு நடைபெற்றது. சீருடை அணிந்து கேப்டனாக நேதாஜி வெள்ளைக் குதிரையில் அணிவகுத்துவந்தார்.
மகளிர் தொண்டர் படையை அமைத்தார். எல்லோரும் பாராட்டினார்கள். அந்த படையில் தமிழர்கள் அதிகம் இடம்பெற்றனர்.
அதே போல இனம் விடுதலை பெற, தங்கள் மண்ணின் மானம் காக்க, கற்பை உயிரினும் மேலாக மதிக்கக் கூடியஈழப் பெண்கள் போராடி வருகின்றனர்.
பெரியார், அண்ணா ஆகியோர் பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் தந்தனர். பெண்களை மதித்தனர். திமுகஆட்சியில் சொத்துரிமை பெண்களுக்கு கிடைத்தது. பெண்ணுரிமை கிடைக்க பாடுபட்டது திராவிட இயக்கம்.
பெண்களுக்கு உரிய மரியாதையையும் பாதுகாப்பையும், மதிப்பையும் மதிமுக அளிக்கும் மகளிரை வணங்கிபோற்றுகிற இயக்கம் மதிமுக என்று கூறினார்.