For Daily Alerts
Just In
வெள்ள நிவாரண குளறுபடி: வாசன் கண்டனம்
சென்னை:
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் பெரும் குளறுபடிகள், முறைகேடுகள் நடந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணஉதவிகள் வழங்குவதில் பெரும் குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்து வருகின்றன. இதுகண்டனத்துக்குரியது.காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 8000 வரை செலவு செய்து பயிரிட்டிருந்தார்கள்.
அத்தனை பயிர்களும் தற்போது வெள்ள நீரில் மூழ்கி விட்டன. எனவே விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5000 நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ள நவாரண நடவடிக்கைகள் பாரபட்சமின்றி நடைபெற, மாவட்ட அளவில் அனைத்துக் கட்சிக் குழுக்களைஅமைக்க வேண்டும்.
அப்படி அமைத்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான உதவிகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்வாசன்.
Story first published: Saturday, November 12, 2005, 5:30 [IST]