ராஜீவ் கொலையாளிக்கு கருணை கூடாது: காங். கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றவர்களுக்கு மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்க கூடாதுஎன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி, எஸ்டி பிரிவு பொதுச்செயலாளர் லீக் மோகன் ஜனாதிபதிக்குகோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அத்தண்டனையை குறைக்க மறு பரிசீலனை செய்யலாம் என்றுதாங்கள் கூறியதாக பத்திரிகைகளில் வெளியான செய்தி வேதனை தருகிறது.
கொடூரக் கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு கருணைக் காட்டக் கூடாது. அப்பாவிகளைக் கொன்றவர்கள்மனிதாபிமானம் இல்லாதவர்கள்.
சுதந்திரப் போராட்ட வீரரான என் தந்தை லீக் முனுசாமியும், ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்டார். ராஜீவ்கொலையாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்று கூறியுள்ளார் மோகன்.












Click it and Unblock the Notifications