அரசியல் சட்ட திருத்தம்: கருணாநிதி வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுயநிதி தொழிற் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய 2 அரசியல் சட்டங்களை திருத்தும் முயற்சிக்கு திமுகதலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது:

இந்திய அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 31 ஏ ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்ய உத்தேசித்திருப்பதைஅறிந்தேன்.

இதன் மூலம் தனியார் சுயநிதி தொழிற் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அளிக்க இப்போதுள்ள தடைகள் நீக்கப்படும்.

இடஒதுக்கீடு வகை செய்யும் திட்டங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். இக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிடமுடியும்.

இதை அமல் செய்யாத கல்லூரி நிர்வாகங்களை மாநில அரசே ஏற்க இந்தத் திருத்தங்கள் உதவும். எனவே இந்ததிருத்தங்களை வரவேற்கிறேன்.

சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகக் குழு எப்படி அமைய வேண்டும், அவை எப்படி செயல்பட வேண்டும் என்பவைகுறித்தும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+