அப்ரூவர் ஆகிறார் மோனிகா பேடி
மும்பை:
அபுசலேம் வழக்கில் அப்ரூவராக மாற அவரது காதலியான மோனிகா பேடி சம்மதித்துள்ளார் என்று தெரிகிறது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல தாதா அபுசலேமின் காதலி மோனிகா பேடிசிபிஐயால் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிபதி வீட்டில்ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும் படி நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதையடுத்துஅவர் ஹைதராபாத் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது சிபிஐ போலீசார் மோனிகாவிடம் போலி பாஸ்போர்ட் பற்றி விசாரித்த போது அவர் பல திடுக்கிடும்தகவல்களை வெளியிட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணையின் போது மோனிகா சிபிஐக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், அவர் பிரபல தாதாக்களின்செயல்பாடுகள் பற்றி முழுமையாக தெரிவிக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு சில நாட்கள் அவகாசம்வேண்டும் என்று கோரியுள்ளார்.குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாற மோனிகா பேடி விருப்பம் தெரிவித்ததாக சிபிஐ வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
மோனிகா அப்ரூவராக மாறினால் மும்பையின் பிரபல தாதாக்கள், நடிகர்கள், நடிகைகள்,கிரிக்கெட் வீரர்கள் பலர்சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications