பெண் மாஜிஸ்திரேட்டை தாக்கிய டாக்டர் கணவர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பெண் மாஜிஸ்திரேட்டை அவரது கணவர் தாக்கியதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை ஜெயநகரைச் சேர்ந்த கலாராணி 39) அறந்தாங்கி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக உள்ளார். இவர் இப்போது பணியில்இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இவரது கணவர் டாக்டர் வடமலையான். பழங்காநத்தம் பகுதியில் மருத்துமனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே திருமணமான வடமலையான், 15 ஆண்டுகளுக்கு முன் கலாராணியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந் நிலையில் கணவன், மனைவி இடையே சில மாதங்களாக தகராறு இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன் கலாராணி தனதுமகனுடன் காரில் சென்றபோது ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே வடமலையான் அந்தக் காரை தடுத்து நிறுத்தியதாகக்கூறப்படுகிறது.
காரில் இருந்த கலாராணியை டாக்டர் வடமலையான் அடித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து வடமலையான் மீது கலாராணி மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்துவடமலையான் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications