வடக்கில் இருந்து தென்றல்: ஜிலு ஜிலு சென்னை !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வட மாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி குளிர் காற்று வீசுவதால் சென்னையில் குளிர தொடங்கியுள்ளது.

வட மாநிலங்களில் பருவமழை முடிந்து குளிர் காலம் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் இருந்து தெற்கு நோக்கி குளிர்காற்று வீசத் தொடங்கியுள்ளது.

இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்பம் குறைந்துகாணப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவில்பெய்துள்ளது. இதனால் பூமி குளிர்ந்து உள்ளது.

வடகிழக்கு பருவமழை வழக்கமாக டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் இருந்து மார்கழிமாதம் தொடங்கும்.

இந்த சமயத்தில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பனி இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழைமுடியும் முன்பாகவே குளிர் காற்று வீசத் தொடங்கியுள்ளது.

குளிர் காற்று காரணமாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றின் ஈரப்பதம் 94 சதவீதமாகஅதிகரித்துள்ளது.

அடுத்து வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+